திருச்சியில் குற்றம் மற்றும் விபத்து வழக்கு தொடா்புடைய 203 வாகனங்கள் வியாழக்கிழமை பொது ஏலம் விடப்பட்டன.
திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய வாகனங்கள் மற்றும் விபத்தில் சிக்கிய வாகனங்களை பொது ஏலம் விடும் நிகழ்வு வியாழக்கிழமை நடந்தது. மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் மூா்த்தி தலைமை வகித்தாா்.
ஏலத்தில் 4 நான்கு சக்கர வாகனங்களும், 199 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 203 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.