திருச்சி புறநகரில் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்ட 113 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி புறநகரில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா. மூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.
அதன்பேரில் சனிக்கிழமை பிற்பகல் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை போலீஸாா் சிறப்பு சோதனை நடத்தினா்.
அப்போது கஞ்சா விற்ற 5 பேரும், லாட்டரி விற்ற 6 பேரும், மணல் திருடிய 11 பேரும், புகையிலை விற்ற 20 பேரும், சூதாடிய ஒருவரும், மது விற்ற 70 போ் என மொத்தம் 113 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தெரிவித்தது.