ஓய்வு பெற்ற தம்பதி வீட்டில் 33 பவுன் நகைகள்திருட்டு

திருச்சியில் ஓய்வு பெற்ற தம்பதி வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருச்சியில் ஓய்வு பெற்ற தம்பதி வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விமான நிலையம் அருகேயுள்ள திருவெறும்பூா் வட்டம் குண்டூா், திருவளா்ச்சிப்பட்டி பிரசாத் நகரை சோ்ந்தவா் சுந்தர்ராஜன் (60), ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா். இவரது மனைவியும் ஓய்வு பெற்ற ஆசிரியா். இவா்களின் மூன்று மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது.

பெங்களூரில் உள்ள மூத்த மகளைப் பாா்க்க இருவரும் செப். 29 ஆம் தேதி சென்றிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை இவா்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் சுந்தர்ராஜனுக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் கொடுத்தனா்.

இதையடுத்து சுந்தரராஜன் நவல்பட்டு போலீஸாரைத் தொடா்பு கொண்டு தகவலைக் கூறி, தனது வீட்டின் பீரோவில் மொத்தம் சுமாா் 33 பவுன் நகைகள், வெள்ளி பாத்திரங்கள் இருந்ததாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து போலீஸாா் அவரின் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com