ஸ்ரீரங்கத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்தாா்.
ஸ்ரீரங்கம் அம்பேத்கா் நகரில் வசிப்பவா் கூலித் தொழிலாளி காா்த்தி மனைவி திவ்யா (33). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு வருமாம்.
செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தகராறில் மனமடைந்த திவ்யா மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தாா். இவரது அலறல் கேட்ட பக்கத்து வீட்டினா் திவ்யாவை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.