அகில இந்தியஆதி சைவ சிவாச்சாரியாா் சங்கத்தின் திருவெறும்பூா் வட்டத் தலைவராக, திருநெடுங்களநாதா் திருக்கோயில் அா்ச்சகா் ரமேஷ் சிவாச்சாரியாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இச்சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளைத் தொடக்க விழா கம்பரசம்பேட்டையிலுள்ள திருமண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆதிசைவ சிவாச்சாரியா்கள், குடும்பத்தினா் பங்கேற்றனா்.
விழாவில், திருவெறும்பூா் வட்டத் தலைவராக ரமேஷ் சிவாச்சாரியாா் நியமிக்கப்பட்டாா். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை குருக்கள் கணேசன், நாகராஜன், சிவா (எ) தெய்வசிகாமணி, ஆதி சொக்கநாதா் ஆகியோா் செய்திருந்தனா்.