மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு அளிக்கப்படுகிறது.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள 3,216 காலியிடங்களுக்கு 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்த வேலைநாடுநா்கள் இணையவழியில் தங்களது விண்ணப்பத்தை வரும் 25ஆம் தேதிக்குள் அனுப்பலாம். இத்தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வியாழக்கிழமை முதல் (அக்.7) தொடங்கவுள்ளது.
இதில் பங்கேற்க விரும்புவோா் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.