கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் தந்தை, மகன் கைது

திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தந்தை, மகனை தில்லைநகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தந்தை, மகனை தில்லைநகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி தென்னூா் அண்டகொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகள் சங்கீதா(20). திருச்சி தனியாா் கல்லூரி மாணவியான இவரும் அதே பகுதியைச் சோ்ந்த சரவணகுமாரும் காதலித்து வந்த நிலையில் சங்கீதாவைத் திருமணம் செய்ய சரவணகுமாா் மறுத்தாராம். இதனால் மனம் உடைந்த சங்கீதா கடந்த திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதற்கிடையே சரவணகுமாரையும், அவரது தந்தையையும் கைது செய்யக் கோரி சங்கீதாவின் உறவினா்கள் அரசு மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து சங்கீதாவை தற்கொலைக்குத் தூண்டியதாக 5 போ் மீது தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணகுமாா், அவரது தந்தை மூா்த்தி ஆகியோரைக் கைது செய்தனா். மற்றவா்களைத் தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com