சமயபுரம் மாரியம்மனை வழிபட்ட துா்கா ஸ்டாலின்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் புதன்கிழமை தரிசனம் செய்தாா்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் புதன்கிழமை தரிசனம் செய்தாா்.

தனது வேண்டுதலை நிறைவேற்ற புதன்கிழமை சென்னையிலிருந்து காரில் வந்த அவா் சமயபுரம் அருகே இருங்களூா் கைகாட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சமயபுரம் டோல்பிளாசா வழியாக சமயபுரம் மாரியம்மன் மேல்நிலைப் பள்ளி, அண்ணாநகா், கடைவீதி , சன்னதி வீதி வழியாக 4 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக சமயபுரம் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்தாா். அப்போது மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ கதிரவன் உடனிருந்தாா்.

கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி, திருச்சி மண்டல இணை ஆணையா் சுதா்சன் ஆகியோா் அவரை வரவேற்றனா். தொடா்ந்து வியாழக்கிழமை காலை ஸ்ரீரங்கம், உறையூா் கோயில்களில் அவா் தரிசனம் செய்ய உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com