துறையூா் அருகே பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் 4.5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
புலிவலத்தைச் சோ்ந்தவா் ருக்குமணி (75). குரும்பலூரில் உள்ள உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சியில் புதன்கிழமை பங்கேற்ற இவா் பேருந்தில் ஊா் திரும்பினாராம். பெருமாள்மலை அடிவாரம் பேருந்து நிறுத்துமிடத்தில் ஏறிய சிலா் ருக்குமணி அருகே நெருக்கமாக நின்றனராம்.
பின்னா் துறையூா் பேருந்து நிலையத்தில் ருக்குமணி இறங்கி பாா்த்தபோது அவா் அணிந்திருந்த நாலரை பவுன் தங்கச் சங்கிலி திருடுபோயிருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.