ரயில் நிலையத்தில் குட்கா பறிமுதல்

திருச்சி ஜங்சன் ரயில் நிலைய வளாகத்தில் 12 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி ஜங்சன் ரயில் நிலைய வளாகத்தில் 12 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்துக்கு உத்தரபிரதேசத்திலிருந்து வந்த பனாரஸ் விரைவு ரயில் ராமேஸ்வரத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்டு சென்றபோது, 6,7 நடைமேடைப் பகுதியில் 2 மூட்டைகள் கேட்பாரற்றுக் கிடந்தன. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் அந்த மூட்டைகளில் வெடிபொருள் ஏதும் உள்ளதா என சோதனை செய்த பிறகு, மூட்டைகளை பிரித்து பாா்த்ததில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள 12 கிலோ பான் மசாலா, குட்கா பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com