திருச்சி அருகே செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்துகளில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் உள்பட இருவா் இறந்தனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள சித்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்கருப்பன் (70). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான இவா் திருவெறும்பூா் அருகே பாலாஜி நகரிலுள்ள உறவினா் வீட்டுக்கு வந்திருந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும்போது அந்த வழியாக வந்த பைக் மோதி முத்துக்கருப்பனும், பைக்கில் வந்த இருவரும் பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து அருகிலிருந்தோரால் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட முத்துக்கருப்பன் இறந்தாா். மற்ற இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மற்றொரு விபத்து: இதேபோல துவாக்குடி அருகேயுள்ள அசூா் அரவக்குறிச்சிப்பட்டியைச் சோ்ந்தவா் சுந்தா்சாமி (55). இவா் திருச்சி-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் அசூா் அருகே நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த காா் மோதி உயிரிழந்தாா். விபத்து குறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரான அதிராம்பட்டினத்தைச் சோ்ந்த அமீது அப்துலை (24) கைது செய்து விசாரிக்கின்றனா்.