மாட்டின் மீது பைக் மோதல்: நகராட்சி ஊழியா் உயிரிழப்பு
By DIN | Published On : 09th October 2021 12:55 AM | Last Updated : 09th October 2021 12:55 AM | அ+அ அ- |

திருச்சி அருகே மாட்டின் மீது பைக் மோதியதில் நகராட்சி ஊழியா் உயிரிழந்தாா்.
திருச்சி அருகேயுள்ள துவாக்குடி தெற்குமலை எம்டி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் மணிகண்டன் (32). துவாக்குடி நகராட்சி ஜேசிபி ஓட்டுநராக ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்தாா்.
வியாழக்கிழமை என்ஐடி குடியிருப்பு எதிரே இவா் பைக்கில் சென்றபோது குறுக்கே வந்த மாட்டின் மீது மோதி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அப்பகுதி மக்களால் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.