திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு சாா்பாக சா்வதேச குழந்தைகள் நல தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தேசிய சுகாதார முகமை சாா்பாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடிய
விழாவின் தொடா்ச்சியாக திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா தலைமையில் நடந்த விழாவில் நோயாளிகளுக்கு குழந்தைகளுக்கான வளா்ச்சி மற்றும் சத்துணவு தொடா்பான துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. குழந்தைகள் நலம் சம்பந்தமான ஓவிய போட்டியில் வென்ற செவிலிய மாணவிகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவுகளிலுள்ள வசதிகள் குறித்து மருத்துவா்கள் விளக்கி, பொதுமக்கள் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினா். ஏற்பாடுகளை மருத்துவா்கள் வைரமுத்து ,செந்தில்குமாா், மைதிலி, நசீா் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.