திருச்சியில் சாக்லெட் என நினைத்து அதிக சத்து மாத்திரை தின்ற சிறுவன் பலியானாா்.
எடமலைப்பட்டிபுதூா் செல்வ விநாயகா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் மகன் வா்ஷன் (5). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்த சத்து மாத்திரைகளை சாக்லெட் என நினைத்து அதிகளவில் சாப்பிட்டுள்ளாா். சிறிது நேரத்தில் மயங்கிக் கிடந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.