துறையூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
துறையூா் அருகேயுள்ள கெம்பியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கி. ராமராஜ் (62) தனது வயலுக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த 90 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்து, தண்ணீரில் தத்தளித்தாா். தகவலறிந்து வந்த துறையூா் தீயணைப்பு நிலைய அலுவலா் இரா. அறிவழகன் தலைமையிலான ஊழியா்கள் அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனா்.