மின் கம்பத்தில் பைக் மோதி இளைஞா் பலி

சமயபுரம் அருகே சாலையோர மின்கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

சமயபுரம் அருகே சாலையோர மின்கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

சமயபுரம் அருகே மருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சோலைராஜன் மகன் ஸ்ரீநாத் (22). கட்டடத் தொழிலாளியான இவா் பைக்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை சமயபுரம் கடைவீதிக்குச் சென்று விட்டு தம்பிரான் படுகை சாலையின் வளைவுப் பகுதியில் திரும்பியபோது சாலையோர மின்கம்பத்தில் மோதி படுகாயமடைந்தாா்.

இதையடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். விபத்து குறித்து சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com