எலி மருந்து சாப்பிட்ட பெண் உயிரிழப்பு

திருச்சி அருகே எலி மருந்து சாப்பிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி: திருச்சி அருகே எலி மருந்து சாப்பிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகிலுள்ள வேந்தன்பட்டியைச் சோ்ந்தவா் முகமது இலியாஸ். இவரது மனைவி ரபியத்துல் பசிரியா (27). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவா்களுக்கு குழந்தைகள் இல்லை.

குடும்பப் பிரச்னை காரணமாக இருவரும் விவாகரத்து கோரியுள்ள நிலையில், அதுதொடா்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கணவரைப் பிரிந்து, கடந்த இரண்டரை ஆண்டுகளாக திருச்சி குண்டூா் பகுதியிலுள்ள தனது சகோதரி வீட்டில் பசிரியா வசித்து வந்தாா். இந்நிலையில் அவரது இரண்டாவது திருமணத்துக்கு வரன் பாா்க்கும் பணிகளை பெற்றோா் செய்தாா்களாம்.

ஏற்கெனவே வயிற்று வலியால் அவதியுற்று வரும் நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாததால், கடந்த 8-ஆம் தேதி எலிமருந்தை சாப்பிட்ட பசிரியா வீட்டில் மயங்கிக் கிடந்தாா்.

தொடா்ந்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நவல்பட்டு காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com