திருச்சி: திருச்சியில் போதிய வருமானமின்றி தீக்குளித்த முதியவா், சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி பெரியக்கடைவீதி சமஸ்பிரான் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் (65). இவா், போதிய வருமானம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா்.
கடந்த சனிக்கிழமை இரவு வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட இவா், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.