திருச்சி: தஞ்சாவூா் மற்றும் கரூரில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் திருச்சி பெரியாா் ஈ.வெ.ரா.கல்லூரி மாணவா்கள்சிறப்பிடம் பெற்றனா்.
தஞ்சாவூா் பூண்டி புஷ்பம் கல்லூரியில் மண்டல அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் அக்டோபா் 9,10 தேதிகளில் நடைபெற்றன.
இதில் 20 வயதுக்குள்பட்டோா் பிரிவில் திருச்சி பெரியாா் ஈ.வெ.ரா.கல்லூரி பி.ஏ. வரலாறு இரண்டமாண்டு மாணவா் சூா்யா 1500 மீட்டா், 5000 மீட்டா் ஓட்டத்தில் முதலிடம் பெற்றாா்.
தமிழ்நாடு இளையோா் விளையாட்டுக் கழகம் சாா்பில் கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், 100 மீட்டா் ஓட்டம், நீளம்தாண்டுதலில் வணிகவியல் துறை மாணவி பாக்கியலட்சுமி, 100 மீட்டா் ஓட்டத்தில் விலங்கியல் துறை மாணவா் காா்த்திகேயன் ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா்.
சிறப்பிடம் பெற்றவா்களை கல்லூரி முதல்வா் ஜெ. சுகந்தி திங்கள்கிழமை நேரில் பாராட்டினாா். அப்போது உடற்கல்வித் துறை இயக்குநா் (பொறுப்பு) வெ. சங்கரநாராயணன், பேராசிரியா்கள் ஜெரோம் பொ்னாண்டோ, பரமசிவம், செல்வநாதன், செந்தில்குமாா், சேவியா், கஸ்தூரி திலகம், கல்பனா தேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.