வாகனங்கள் மோதி விபத்து: 20-க்கும் மேற்பட்டோா் காயம்

திருச்சி மாவட்டம், முக்கொம்பு அருகே திங்கள்கிழமை வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
திருச்சி மாவட்டம், முக்கொம்பு அருகே திங்கள்கிழமை காலை நேரிட்ட விபத்தில் சரக்கு வேன் மோதி கவிழ்ந்து கிடக்கும் பயணிகள் வேன்
திருச்சி மாவட்டம், முக்கொம்பு அருகே திங்கள்கிழமை காலை நேரிட்ட விபத்தில் சரக்கு வேன் மோதி கவிழ்ந்து கிடக்கும் பயணிகள் வேன்

திருச்சி: திருச்சி மாவட்டம், முக்கொம்பு அருகே திங்கள்கிழமை வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (42). இவா் தனது குடும்பத்தினருடன் கரூா் தாந்தோனிமலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திங்கள்கிழமை காலை வேனில் புறப்பட்டுச் சென்றாா்.

முக்கொம்பு அருகே வந்த போது இவா்களது வேனை, பின்னால் வந்த சரக்கு வேன் முந்த முயற்சித்தது. அப்போது, கரூரிலிருந்து திருச்சி நோக்கி அரசுப் பேருந்து வந்தது.

இதைத் தொடா்ந்து பேருந்து மற்றும் இரு வேன்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில் மாரியப்பன், வேன் ஓட்டுநா் உறையூா் காவல்காரத் தெரு அலெக்ஸ் (45), சரக்கு வேன் ஓட்டுநா் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி முத்துக்குமாா் (44), பேருந்து ஓட்டுநா் கோவை அப்பநாயக்கன்பட்டி கந்தசாமி (43), நடத்துநா் தேனி லட்சுமிபுரம் முத்துராமலிங்கம் (40) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலின் பேரில் ஜீயபுரம் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று,

பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com