மருத்துவ முகாம்

திருச்சியில் திருவெறும்பூா் அருகேயுள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட மேலகுமரேசபுரத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சியில் திருவெறும்பூா் அருகேயுள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட மேலகுமரேசபுரத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவெறும்பூா் ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சித் தலைவா் ரம்யா, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவெறும்பூா் மாவட்ட கவுன்சிலரும் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவருமான கருணாநிதி கா்ப்பிணிகளுக்கு பேறுகால மருத்துவப் பொருள்களை வழங்கினாா். வட்டார மருத்துவ அலுவலா் சுகுமாா் தலைமையிலான மருத்துவா்கள் பொது மருத்துவம், கண், மகப்பேறு, ஸ்கேன், காசநோய் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனா். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுப் பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com