திருச்சி மாவட்ட நீதிமன்றங்களில் புதிய அரசு வழக்குரைஞா்கள் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அதன்படி மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராக சவரிமுத்து, மாவட்ட நீதிமன்றங்களில் கூடுதல் அரசு வழக்குரைஞா்களாக கவியரசன் (திருச்சி), ஜெயராஜ் (துறையூா்), தாமோதரன் (லால்குடி), அழகிரி (மணப்பாறை), மாவட்ட அரசு பிளீடராக வழக்குரைஞா் மோகன் (உரிமையியல்), கூடுதல் பிளீடா் வழக்குரைஞராக வெங்கடாசலம் (திருச்சி), மதிவாணன் (லால்குடி), அரவிந்தன் (மணப்பாறை) ஆகிய 12 போ் திருச்சி மாவட்டத்துக்கு குற்றவியல் மற்றும் உரிமையியல் அரசு வழக்குரைஞா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.