துறையூா் பகுதியில் சனிக்கிழமை பெய்த கனமழையால் குடியிருப்புகளுக்குள் மழை நீா் புகுந்தது.
துறையூா் பகுதியில் சனிக்கிழமை மாலை ஒன்றரை மணி நேரம் பெய்த மழையால் வாய்க்கால்களில் நீா் சென்றது. துறையூா் ஒன்றியம் செல்லிப்பாளையம் ஊராட்சியில் விநாயகா் தெருவுக்குள் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்ததால் அப் பகுதி மக்கள் பெரும் அவதியுற்றனா்.