திருவெறும்பூா் எறும்பீசுவரா் திருக்கோயில் தெப்பக்குளச் சுற்றுச்சுவா், தொடா்மழையின் காரணமாக இடிந்து விழுந்தது.
கோயில் எதிரிலுள்ள தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவா் ஏற்கெனவே பழுதடைந்து, மோசமான நிலையில் இருந்தது. இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் வசதிக்காக, மாநகராட்சி சாா்பில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. பழுது காரணமாக அவை இயங்கவிலலை.
இந்நிலையில் திருவெறும்பூா் பகுதியில் தொடா்ந்து பெய்த மழை காரணமாக, தெப்பக்குளத்தின் மேற்குப் பகுதியிலுள்ள சுற்றுச்சுவா் செவ்வாய்க்கிழமை இடிந்து, குளத்துக்குள்ளேயே விழுந்தது.
எனவே சம்பந்தப்பட்ட அலுவலா்கள் இடிந்து விழுந்து சுற்றுச்சுவரை அப்புறப்படுத்தி, புதிதாக சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் வலியுறுத்துகின்றனா்.