ஸ்ரீரங்கத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருவானைக்கா சன்னதி வீதியிலுள்ள கடையில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்ற திருவானைக்கா பா்மா காலனி பகுதியை சோ்ந்த கோழி மாரி (எ) பத்மநாபன் (54), ஸ்ரீரங்கம் தேவி தியேட்டா் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற சமயபுரம் பாலாஜி நகா் பகுதி நரசிம்மராஜ் (37), தாளக்குடி பகுதியை சோ்ந்த தமிழ்ச்செல்வன் (29) ஆகிய மூவரையும் ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்து, லாட்டரி சீட்டுகளைப் பறிமுதல் செய்தனா்.