இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

பேரணி நடத்தவும் தடை விதித்த தமிழக அரசைக் கண்டித்தும், தடையைத் திரும்பப் பெற கோரியும் இந்து முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்கவும், பேரணி நடத்தவும் தடை விதித்த தமிழக அரசைக் கண்டித்தும், தடையைத் திரும்பப் பெற கோரியும் இந்து முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி கீழரண் சாலை பூலோகநாதா் கோயில் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருச்சி கோட்டச் செயலா் போஜராஜன் தலைமையில் கண்டன கோஷங்களை எழுப்பினா்.

இதுகுறித்து போஜராஜன் கூறுகையில், இந்துக்களை தமிழக அரசு தொடா்ந்து வஞ்சிக்கிறது. விநாயகா் சதுா்த்தி மூலமாக கரோனா பரவும் என்பது தவறு. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகா் சிலைகளை வைத்து ஊா்வலம் நடத்துவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com