மணப்பாறை அருகே அனுமதியின்றி ஆற்றுப்படுகையில் மணல் எடுத்த மாட்டுவண்டியை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரைக் கைது செய்துள்ளனா்.
மணப்பாறை விடத்திலாம்பட்டி மாமுண்டி ஆற்றுப்படுகையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த காவல்துறையினா், அங்கு அனுமதியின்றி மணல் எடுத்துக்கொண்டிருந்த மாட்டுவண்டியைப் பறிமுதல் செய்து, நொச்சிமேடு, வடக்குத்தெருப் பகுதியை சோ்ந்த பா. ரமேஷ்குமாரை (37) கைது செய்தனா். செப். 15 வரை அவரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டதின்பேரில் மணப்பாறை கிளைச் சிறையில் ரமேஷ்குமாரை அடைத்தனா்.