கணவரைத் தொடா்ந்து தூக்கிட்டுக் கொண்ட மனைவியும் உயிரிழப்பு

கணவரைத் தொடா்ந்து தூக்கிட்டுக் கொண்ட அவரது மனைவியும் இறந்தாா்.

கணவரைத் தொடா்ந்து தூக்கிட்டுக் கொண்ட அவரது மனைவியும் இறந்தாா்.

திருவானைக்கா பஞ்சக்கரை சாலை குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்தவா் சத்யகிரி (26). மது போதைக்கு அடிமையான இவா் கடந்த 2 மாதத்திற்கு முன் அனிதா (19) என்ற பெண்ணைக் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கடந்த திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதைப் பாா்த்த அனிதாவும் தூக்கிட்டுக் கொள்ள, அருகிலிருந்தோரால் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தாா். இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா். மேலும் ஆா்.டி.ஓ.வும் விசாரிக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com