மணப்பாறையில், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் மக்கள் அதிகாரம் அமைப்பினா் புதன்கிழமை தெருமுனை கூட்டம் நடத்தினா்.
பயணியா் மாளிகை முன் உள்ளிட்ட இரு இடங்களில் வட்ட ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆனந்த், மதிவாணன், கலைக்குழு லதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காவிரிநாடான் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில் சமையல் எரிவாயு உருளை விலையுயா்வைக் கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. கண்ணன் நன்றி கூறினாா்.