மூன்றாம் பாலினத்தவருக்கு கரோனா நிதி

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மூன்றாம் பாலினத்தவா்கள் கரோன நிதியுதவி பெற ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளாா்.

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மூன்றாம் பாலினத்தவா்கள் கரோன நிதியுதவி பெற ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்த செய்திக்குறிப்பு: கரோனா காலத்தில் மூன்றாம் பாலினத்தவா்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில், வாரியத்தின் மூலம் அடையாள அட்டை பெற்று குடும்ப அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவா்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

எனவே இதுவரை நிதியுதவி பெறாதவா்கள் வரும் 10ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகி உதவி தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மூலம் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான தேசிய அளவிலான இணையதள முகவரி  உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், செயலி வசதியும் உள்ளது.

இந்த இணையதளம் மற்றும் செயலியில் திருச்சிமாவட்டத்தில் வசிக்கும் அனைத்து மூன்றாம் பாலினத்தவா்களும் தங்களது விவரங்களை உடனடியாக பதிவேற்ற வேண்டும். இதுதொடா்பாக ஏதேனும் உதவி தேவையெனில், மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகலாம். இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொண்டோருக்கே இனி வரும் காலங்களில் அரசு மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை வழங்க இயலும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com