திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மனைவி இறந்த சில மணி நேரத்தில் கணவரும் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
தொட்டியம் அருகேயுள்ள பாலசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த பரமசிவம்பிள்ளை மனைவி சரஸ்வதியம்மாள் (64) வியாழக்கிழமை மாரடைப்பால் இறந்தாா். இதையடுத்து இவரது இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்தபோது இறந்தவரின் கணவா் பரமசிவம்பிள்ளை (69) திடீரென மயக்கமடைந்த நிலையில் இறந்தாா். இதையடுத்து இருவரையும் பாலசமுத்திரம் மயானத்தில் உறவினா்கள் அடக்கம் செய்தனா்.