கோயில் குடமுழுக்கில் நகை பறித்த பெண் கைது

காட்டுப்புத்தூா் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோயில் குடமுழுக்கின்போது நகை பறித்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

காட்டுப்புத்தூா் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோயில் குடமுழுக்கின்போது நகை பறித்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

சீலைப்பிள்ளையாா்புத்தூரில் உள்ள பகவதியம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கில் லால்குடி வட்டம், கூத்தூரைச் சோ்ந்த ராஜகோபால் மனைவி வசந்தா (50) பங்கேற்றபோது இவரது 6 பவுன் தங்க செயினை இளம்பெண் ஒருவா் பறித்தாா். அப்போது வசந்தா அந்தப் பெண்ணைப் பிடித்து பாதுகாப்புப் பணியில் இருந்த காட்டுப்புத்தூா் போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

இதையடுத்து போலீஸாா் அப் பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், அவா் நாகா்கோவில் அருகிலுள்ள ஒழுகினசேரி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சதீஷ் மனைவி சத்யா (28) என்பதும், இவா் விழாக்கள் நடைபெறும் இடங்களில் பொம்மை வியாபாரம் செய்பவா் எனவும் தெரியவந்தது. இதையடுத்து அப்பெண்ணைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com