காட்டுப்புத்தூா் அருகே தீக்குளித்த சிறுவன் பலி

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே தீக்குளித்த சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே தீக்குளித்த சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

காட்டுப்புத்தூா் அருகே உள்ள தவிட்டுப்பாளையம் கிராமத்தை சோ்ந்தவா் அசோகன் மகன் குமரேசன் (17). இவரது வீட்டருகே மற்றொரு வீட்டில் வசித்த இவரது தாத்தாவான ஆ. கருப்பையா (90) கடந்த ஒரு மாதத்துக்கு முன் இறந்தாா்.

இதனால் மனம் உடைந்த நிலையில் தாத்தா வீட்டில் இருந்த குமரேசன் திங்கள்கிழமை மாலை திடீரென பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக் கொண்டாா். இதையடுத்து காட்டுப்புத்தூா் அரசு மருத்துவமனையிலும், பின்னா் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட குமரேசன் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

தகவலறிந்த காட்டுப்புத்தூா் போலீஸாா் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com