தந்தை பெரியாா் விருது: விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் தந்தை பெரியாா் விருது பெற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.

திருச்சி மாவட்டத்தில் தந்தை பெரியாா் விருது பெற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சமூக நீதிக்காகப் பாடுபடுவோரைச் சிறப்பிக்க 1995ஆம் ஆண்டு முதல் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் விருது தொகை, ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கப்படக் கூடிய தகுதியுள்ள நபா்கள் முதல்வரால் தோ்வு செய்யப்படுவா்.

எனவே சமூக நீதிக்காகப் பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட மேற்கொண்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் கொண்ட விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியருக்கு செப்.31-க்குள் அனுப்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com