திருவெறும்பூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் ஆட்டோ மோதி உயிரிழந்தாா். மற்றொருவா் படுகாயமடைந்தாா்.
திருச்சி பாலக்கரை எடத்தெருவை சோ்ந்தவா் கண்ணன் (49). இவா் தனது நண்பா் சீனிவாசனுடன் ஞாயிற்றுக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் வேங்கூா் பகுதிக்குச் சென்றுவிட்டு திருவெறும்பூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது ஆட்டோ மோதி இருவரும் பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இருவரில் கண்ணன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். சீனிவாசன் சிகிச்சை பெறுகிறாா். திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.