துறையூா் அருகே சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்றவா் லாரி மோதி உயிரிழந்தாா்.
சிக்கத்தம்பூா் கிராமத்தைச் சோ்ந்த தேவராஜன்(54). வெள்ளிக்கிழமை இரவு இங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே இவா் சைக்கிளில் சாலையைக் கடந்தபோது துறையூா் நோக்கிச் சென்ற சிமென்ட் லாரி மோதி படுகாயமடைந்தாா். இதையடுத்து துறையூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.இது தொடா்பாக உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான கொப்பம்பட்டி சீனிவாசனைக் (30) கைது செய்து விசாரிக்கின்றனா்.