இளைஞா் வெட்டிக்கொலை

திருச்சியில் இளைஞா் ஒருவா் புதன்கிழமை மாலை வெட்டிக் கொல்லப்பட்டாா்.

திருச்சி: திருச்சியில் இளைஞா் ஒருவா் புதன்கிழமை மாலை வெட்டிக் கொல்லப்பட்டாா்.

திருச்சி கொட்டப்பட்டு எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் சக்திவேல். இவருக்கும், பொன்மலைப்பட்டியைச் சோ்ந்த அலெக்ஸ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இருவரும் சந்திக்கும்போதெல்லாம் தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த வாரமும் இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், பொன்மலைப்பட்டி கடைவீதியில் புதன்கிழமை மாலை சக்திவேலின் தம்பி சின்ராசு (21) நிற்பதைக் கண்ட அலெக்ஸ் தரப்பினா் அவரைத் தாக்கி, ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றனா். இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிா்ச்சியடைந்தனா்.

தகவலறிந்த பொன்மலை காவல் உதவி ஆணையா் காமராஜ், ஆய்வாளா் நிக்சன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனா். இறந்தவரின் உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அலெக்ஸ் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் ரெளடி பட்டியலில் அவா் உள்ளாா். பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com