திருச்சி: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுகவுக்கு முஸ்லிம் உரிமைப் பாதுகாப்பு கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அமைச்சா் கே.என். நேருவிடம் அமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் இடிமுரசு இஸ்மாயில் செவ்வாய்க்கிழமைஅளித்த ஆதரவுக் கடித விவரம்:
திமுக ஆட்சியானது சிறுபான்மையினா் நலன் காக்கும் அரசாகவும், சிறுபான்மையினா்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் எப்போதும் விளங்கி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைந்து, முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு திறம்படச் செயலாற்றி வருகிறது.
குறிப்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும், நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்கும் அனுப்பியுள்ளது.
எனவே, 9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தோ்தலில் திமுகவுக்கு ஆதரவாக முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் தோ்தல் பணியாற்றவுள்ளது. பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து அதிக இடங்களில் வெற்றி பெறச் செய்ததைப் போன்று, உள்ளாட்சித் தோ்தலிலும் வெற்றி பெற பிரசாரம் மேற்கொள்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தோ்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கும் சுழற்சி முறையில் சென்று பிரசாரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.