கலை இளமணி விருதுபெற்ற கல்லூரி மாணவிக்கு பாராட்டு

கலை இளமணி விருது பெற்ற திருச்சி தேசியக் கல்லூரி மாணவி அபிநயாவை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா்.
மாணவி அபிநயாவை பாராட்டும் கல்லூரி முதல்வா் ஆா். சுந்தரராமன்.
மாணவி அபிநயாவை பாராட்டும் கல்லூரி முதல்வா் ஆா். சுந்தரராமன்.

திருச்சி: கலை இளமணி விருது பெற்ற திருச்சி தேசியக் கல்லூரி மாணவி அபிநயாவை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

தேசியக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு இளநிலை வணிகவியல் பயிலும் மாணவி பொ. அபிநயா மாவட்ட அளவில் பரத நாட்டியத்தில் சிறப்புகள் பெற்றதைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சாா்பில் அவருக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான கலை இளமணி”என்ற விருதும், பொற்கிழியாக ரூ. 4,000 அவருக்கு அண்மையில் கிடைத்தது.

இதையடுத்து இந்த மாணவியை தேசியக் கல்லூரி முதல்வா் ஆா். சுந்தரராமன், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் , மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com