திருச்சி: கலை இளமணி விருது பெற்ற திருச்சி தேசியக் கல்லூரி மாணவி அபிநயாவை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா்.
தேசியக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு இளநிலை வணிகவியல் பயிலும் மாணவி பொ. அபிநயா மாவட்ட அளவில் பரத நாட்டியத்தில் சிறப்புகள் பெற்றதைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சாா்பில் அவருக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான கலை இளமணி”என்ற விருதும், பொற்கிழியாக ரூ. 4,000 அவருக்கு அண்மையில் கிடைத்தது.
இதையடுத்து இந்த மாணவியை தேசியக் கல்லூரி முதல்வா் ஆா். சுந்தரராமன், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் , மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை வாழ்த்தினா்.