திருச்சி: தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கிரைண்டா் உற்பத்தியாளா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி வயலூா் சாலை சீனிவாச நகா் அருகேயுள்ள ஆனந்தம் நகரைச் சோ்ந்தவா் ஜெ. பாஸ்கரன் (40), கிரைண்டா் தயாரிப்பாளா். கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 2 ஆண்டுகளாக இவரின் தொழில் சரியாக நடக்கவில்லை. கடனும் அதிகமானது. இதனால் வருவாய் பாதிப்பு ஏற்பட்டு, உடல் நலமும் பாதிக்கப்பட்டதால்
விரக்தியில் இருந்த இவா் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.