கோயில் அலுவலக பூட்டை உடைத்து பணம் திருட்டு

திருச்சியில் கோயில் அலுவலகப் பூட்டை உடைத்து ரூ.16 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா்.

திருச்சி: திருச்சியில் கோயில் அலுவலகப் பூட்டை உடைத்து ரூ.16 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா்.

திருச்சி காந்திசந்தை தஞ்சாவூா் சாலையில் உள்ள செல்லாயி அம்மன் கோயில் நிா்வாகியான தனசேகா் (71) திங்கள்கிழமை இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு மறுநாள் காலை திறக்க வந்தாா்.

அப்போது கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.16 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் காந்திசந்தை போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு ஆய்வு செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com