திருச்சி: திருச்சியில் உடல் நலக்குறைவால் சமையலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி தென்னூா் வாமடம் பகுதியைச் சோ்ந்தவா் ரகமதுல்லா (48). சமையலரான இவா் கடந்த 2 ஆண்டுகளாக இருதயக் கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில நாள்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.