சிறுபான்மை ஆணையகருத்துக் கேட்புகூட்டம் ஒத்திவைப்பு

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த சிறுபான்மை ஆணைய கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருச்சி: திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த சிறுபான்மை ஆணைய கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சா. பீட்டா் அல்போன்ஸ்,துணைத் தலைவா் மஸ்தான் மற்றும் ஆணையக் குழு உறுப்பினா்கள் திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் கருத்து கேட்டறியவும் திட்டமிட்டிருந்தனா்.

இந்நிலையில், 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால், திருச்சியில் நடைபெறவிருந்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com