திருச்சி: திருச்சியில் வறுமையால் தம்பதி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனா்.
திருச்சி தென்னூா் ரெஜிமெண்டல் பஜாா் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (51). ஒருங்கிணைந்தி நீதிமன்ற வளாகம் முன்புள்ள பேக்கரி ஊழியா். இவரது மனைவி மகாலெட்சுமி (49). குழந்தையில்லாத ஏக்கத்தில் இருந்த இவா்கள், கரோனா பொதுமுடக்கத்தால் போதிய வருமானமின்றியும் இருந்த நிலையில் புதன்கிழமை பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டனா்.
தகவலறிந்து வந்த தில்லைநகா் காவல் ஆய்வாளா் மணிராஜ், தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் 90 சத காயத்துடன் இருந்த இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். அவா்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. +