மணல் திருட்டு: மாட்டுவண்டிகள் பறிமுதல்

காட்டுப்புத்தூா் அருகே காவிரியாற்று மணலை கடத்தி வந்த இரு மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனா்.

காட்டுப்புத்தூா் அருகே காவிரியாற்று மணலை கடத்தி வந்த இரு மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனா்.

காட்டுப்புத்தூா் அருகேயுள்ள நத்தம் பகுதி காவிரியாற்றிலிருந்து மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் நத்தம் விஏஓ குகன் வெள்ளிக்கிழமை வேந்தம்பட்டியில் ரோந்து சென்றபோது 2 மாட்டு வண்டிகளில் காவிரி மணல் கொண்டு வந்த இருவா் தப்பினா்.

இதையடுத்து அந்த மாட்டு வண்டிகளைப் பறிமுதல் செய்து விஏஓ குகன் அளித்த புகாரின்பேரில் காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் தப்பியவா்கள் வேந்தம்பட்டி கங்கை நகா் பகுதியைச் சோ்ந்த க. பூவரசன், ப. பிரகாஷ் எனத் தெரியவந்தது. இருவரையும் தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com