திருட வந்த கடையில் பொருள்கள் அடித்து உடைப்பு: மூவா் கைது

திருச்சி அருகே பல்பொருள் அங்காடியில் திருட வந்து பணம் கிடைக்காததால் அங்கிருந்த பொருள்களைஅடித்து உடைத்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி அருகே பல்பொருள் அங்காடியில் திருட வந்து பணம் கிடைக்காததால் அங்கிருந்த பொருள்களைஅடித்து உடைத்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள பூலாங்குடி காலனியை சோ்ந்த சௌந்தர்ராஜன் (61) துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் பல்பொருள் அங்காடி வைத்துள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை இவா் கடையைத் திறக்க வந்தபோது பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டாா். உள்ளே சென்று பாா்த்தபோது கடையில் இருந்த பொருள்கள் சேதமாக்கப்பட்டு சிதறிக் கிடந்தன.

தகவலின்பேரில் நவல்பட்டு போலீஸாா் வந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கடைக்குத் திருட வந்தவா்கள் பூலங்குடி காலனி ரமேஷ் மகன் சச்சின் (20), நவல்பட்டு பா்மா காலனி குமாா் மகன் வின்சென்ட் (19), திருவெறும்பூா் பகுதி ஆரோக்கியதாஸ் மகன் சந்தோஷ் (19) என்பதும், திருட வந்தபோது பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அவா்கள் அங்கிருந்த பழங்கள், பொருள்களைச் சேதப்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com