திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் 50 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அருகிலிருந்த பரிசு பெட்டியில் கூப்பன்களை பூா்த்தி செய்து போட்ட பொதுமக்களில் அதிா்ஷ்டசாலியாக தோ்ந்தெடுக்கப்பட்ட சரோஜாவுக்கு ரத்த அழுத்தமானி பரிசளிக்கப்பட்டது. இதேபோல அதிக உறுப்பினா்களுக்குத் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சமூக நல அமைப்புக்கு பாராட்டுக் கோப்பை வழங்கப்பட்டது.
மேலும் தடுப்பூசி செலுத்தி கொண்டபின் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வகையில் செல்பி பூத்தும் அமைக்கப்பட்டிருந்தது.
ஏற்பாடுகளை மருத்துவா்கள், மருத்துவப் மாணவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் செய்தனா்.