திருச்சியில் பிஎம்சி மெடிக்கல் சென்டரில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சி ராம்ஜிநகா், ஹரிபாஸ்கா் காலனியில் நடைபெற்ற முகாமிற்கு ஏ.கே. மணிமாறன் தலைமை வகித்தாா். முகாமில் ரத்த அழுத்த சோதனை, சா்க்கரை நோய் பரிசோதனை உள்ளிட்டவற்றுடன் அனைத்து வியாதிகளுக்கும் பரிசோதித்து மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை பிஎம்சி மெடிக்கல் சென்டா் நிா்வாகிகள் மு. மோகனசுந்தரம், மோ. பாரதி ஆகியோா்செய்தனா். காலை 9 முதல் பகல் 1 மணி வரை நடைபெற்ற முகாமில் 120 போ் பயனடைந்தனா்.