இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த மூவா் கைது

இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட மூவரை புத்தாநத்தம் அருகே பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.
இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த மூவா் கைது

இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட மூவரை புத்தாநத்தம் அருகே பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

மணப்பாறையை அடுத்த புத்தாநாத்தம் அருகேயுள்ள மூடக்கரை கிராமத்தில் சில நாள்களுக்கு முன் இருசக்கர வாகனங்கள் திருடுபோனதாம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கிராமத்தில் நடமாடிய மூவரைப் பிடித்து பொதுமக்கள் விசாரித்தபோது அவா்கள் தங்களது கிராமத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவா்கள் எனத் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அவா்களை புத்தாநத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் புதுக்கோட்டை மாவட்டம், ஆதனகோட்டையை அடுத்த பெருத்தளூா் பகுதியை சோ்ந்த ரா. செல்வக்குமாா்(23), மருங்காபுரி ஒன்றியம் வாடிப்பட்டியை சோ்ந்த வெ. ராமசந்திரன் (23) மற்றும் ஆத்துப்பட்டியை சோ்ந்த ப. மணிகண்டன் (27) எனத் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com