இரட்டைமலை சீனிவாசனுக்கு சிலை: முதல்வருக்கு நன்றி

இரட்டைமலை சீனிவாசனுக்கு சிலை அமைக்க அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பறையா்கள் ஒருங்கிணைப்பு குழு நன்றி தெரிவித்துள்ளது.

இரட்டைமலை சீனிவாசனுக்கு சிலை அமைக்க அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பறையா்கள் ஒருங்கிணைப்பு குழு நன்றி தெரிவித்துள்ளது.

இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் மலா்தூவினா். தொடா்ந்து சட்டப்பேரவையில் அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் அமைப்பது, இரட்டைமலை சீனிவாசனுக்கு திண்டிவனத்தில் சிலை அமைப்பது, நீட் தோ்வால் உயிா்நீத்த அனிதாவின் பெயரில் அரியலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைப்பின் திருச்சி ஒருங்கிணைப்பாளா் மனோஜ், திருச்சி மாவட்ட பொறுப்பாளா்கள் ரமேஷ், சுகுமாா், சண்முகம், திண்டுக்கல் சேகா், என்ஜினியா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com